Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவர் அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவர் அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து மரணம்

Share:

சிப்பாங், அக்டோபர்.03-

17 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர், ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சைபர்ஜெயாவில் நிகழ்ந்தது.

அந்த கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியின் எட்டாவது மாடியில் அந்த மாணவரின் உடல், ரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

அந்த மாணவன், அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் மேல் தளத்தில் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி நோர்ஹிஸாம் குறிப்பிட்டார்.

உயிரிழந்த மாணவர், உள்ளூர் பல்லைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்ததாகத் தெரிகிறது. அவரின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி நோர்ஹிஸாம் மேலும் கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்