May 27, 2026
Thisaigal NewsYouTube
நால்வர் மரணத்திற்கு போதைப்பொருளே காரணமாகும்
தற்போதைய செய்திகள்

நால்வர் மரணத்திற்கு போதைப்பொருளே காரணமாகும்

Share:

ஜன.2-

பண்டார் சன்வேயில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்ட நிகழ்வில் நால்வர் மரணம் அடைந்ததற்கு போதை மாத்திரைகள் உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் கான் தெரிவித்துள்ளார்.

Ecstasy போதைப்பொருளை உட்கொண்டதன் விளைவாக அவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ ஹுசேன் ஒமார் குறிப்பிட்டார்.

இறந்த நான்கு பேரை தவிர பாதிக்கப்பட்ட மேலும் மூவரிடம் நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில் போதை மாத்திரைகள் உட்கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிர் பிழைந்த மூவரில் இருவர் இன்னமும் மருத்துவமனையில் உள்ளனர். ஒருவர் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News