குளுவாங், ஃப்லாட் ஹஜி மானான் -யில் பங்லாடேஷி பிரஜையான ஒருவர் தன் தூக்கத்தை கெடுத்ததற்காக சக நாட்டவரை சேர்ந்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.
அங்காடியில் வேலை செய்து வரும் 28 வயதுடைய முஹமாட் சோபுஜ் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்கள் கண்டறியப்பட்டதாக குளுவாங் காவல்துறைத் தலைவர் பாஹ்ரின் நோ தெரிவித்தார்.
இன்று காலை 10 மணியளவில் பங்லாடேஷி பிரஜை ஒருவரிடமிருந்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக பாஹ்ரின் நோ கூறினார்.
அந்நபர் உறங்கி கொண்டிருக்கும் பொழுது முஹமாட் சோபுஜ் அவரை தொந்தரவு செய்ததாகவும், கோபத்தை பொறுத்து கொள்ள முடியாமல் அந்நபர் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக பாஹ்ரின் நோ விவரித்தார்.








