நாட்டில் கோவிட் - 19 நோய்தொற்று அதிகரித்து வருவதை குறித்து பள்ளிவாசலில் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக செயல்பட சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின்படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கெடா இஸ்லாமிய மத விவகாரத்துறையின் (JHEAIK) இயக்குநர் டத்தோ அப்துல் கானி சுல்கிஃப்லி சைனுடின் தெரிவித்தார்.
இவை கோவிட் 19 பரவுவதை கட்டுப்படுத்துவதோடு மற்ற நோய்களிலிருந்தும் தற்காத்து கொள்ள பங்காற்றுவதாக டத்தோ அப்துல் கானி கூறினார்.
கூலிம், கோலமூடா, அலோர் ஸ்டார் ஆகிய இடங்களிலும் கோவிட் 19 அதிகமாக காணப்படுவதால் மக்கள் வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிய கேட்டு கொள்ளப்படுகின்றன.








