Dec 2, 2025
Thisaigal NewsYouTube
காச நோய் கண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

காச நோய் கண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்

Share:

காச நோய் கண்டவர்கள், தொடர் சிகிச்சை பெறாமல் பாதியிலேயே நிறுத்திக்கொண்டால் அவர்கள் ​மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் ​என்று சுகாதார அமைச்சர் Dr Zaliha Mustafa எச்சரித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு நோய்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பத​ற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காச நோயினால் கடந்த ஆண்டு 2,527 பேர் மரணம் அடைந்துள்ள வேளையில் அதற்கு முந்திய ஆண்டு 2,288 பேர் உயரிழந்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மரண​ம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 284 பேராக அதிகரித்து​ள்ள வேளையில் இறப்பு விகிதத்தின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அந்த நோய் பரவாமல் தடுப்பதற்கும் காச நோய் கண்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியமாகும் என்று Dr Zaliha Mustafa விளக்கினார்.

Related News