கோலாலம்பூர், ஜனவரி.22-
தற்காப்பு அமைச்சின் வியூக மாற்றங்களில் ஒரு முக்கிய உந்துசக்தியாகக் கருதப்படும் தேசிய பாதுகாப்புத் தொழில்துறை கொள்கையான DIPN தொடங்கப்பட்டதன் மூலம், மலேசியா உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்பாட்டில் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது.
இந்தக் கொள்கையானது அமைச்சின் முக்கிய மாற்றங்களுக்கான அடித்தளத்தை உருவாக்குவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
DIPN மூலம், நாம் நாட்டின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதாகவும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.
பொது மற்றும் தனியார் துறைகளுக்கிடையேயான நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் உள்ளூர் திறன்களை வலுப்படுத்துவதே DIPN-இன் முக்கிய நோக்கம் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வெளிநாட்டு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதை குறைப்பதே இதன் பிரதான இலக்காகும் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புத் தொழில்துறை கொள்கையான DIPN-ஆனது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.








