Mar 16, 2026
Thisaigal NewsYouTube
GM Klang மையத்தின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா
தற்போதைய செய்திகள்

GM Klang மையத்தின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா

Share:

மலேசியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனை மையமான GM Klang,, 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் செலவிடுதல், பதிவிறக்கம் செய்தல் மற்றும் மீட்டுக்கொள்ளுதல் என்ற பிரச்சாரத்தை ஜனவரி 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 18 ஆம் தேதி வரையில் ஏற்பாடு செய்து இருப்பதன் மூலம் தனது 15 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

பொருட்களை வாங்குவதற்கு தங்களின் நம்பிக்கைக்குரிய மையமாக GM Klang- கை எப்போதும் தேர்வு செய்யும் வருகையாளர்களின் விசுவாசம் மற்றும் ஆதரவுக்கு மதிப்பளிக்கும் முயற்சியாக இந்த பிரச்சாரம் நடத்தப்படுகிறது

கடந்த 15 ஆண்டுகளில், GM Klang, பல்வேறு வெற்றிகளையும் மைல்கற்களையும் கடந்து, அதன் தற்போதைய நிலையை உறுதிபடுத்திக்கொண்டுள்ளது. .

GM Klang – முத்திரை தொடர்புத்துறையின் மூத்த மேலாளர் Norsuhaida Othman கூறுகையில், GM Klang - இன் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் "இந்த ஆண்டு இறுதி வரையில் பலதரப்பட்ட நடவடிக்கைகள் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.

இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், வருகையாளர்களின் கொள்முதல் அனுபவத்தை மேம்படுத்தவும், பல்வேறு கவர்ச்சிகரமான வெகுமதிகளையும் அனுபவிக்கவும், GM Klang வர்த்தக சமூகத்தின் செயலியின் தரம், புதிய அம்சங்களுடன் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

GM Klang இன் 15 ஆவது நிறைவு விழாவை கூட்டாக இணைந்து, மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அவர்களை வருக, வருக என்று தாங்கள் வரவேற்பதாக Norsuhaida Othman குறிப்பிடுகிறார்.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி