போர்ட்டிக்சன், மே.03-
போர்ட்டிக்சன், Jalan Bypass பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட Op Samseng Jalanan சோதனையில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 21 முதல் 33 வயதுடைய நான்கு உள்ளூர் இளைஞர்களைக் காவற்படையினர் கைது செய்தனர். இந்தச் சோதனையின் போது மொத்தம் 264 மோட்டார் சைக்கிள்களும் 279 நபர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமை, சட்டத்திற்குப் புறம்பாக புகைக்குழாய் மாற்றம் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 271 அபராதங்கள் விதிக்கப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்டக் காவற்படை துணைத் தலைவர், Deputi Superintendan Mohd Ruslan Mat Kib தெரிவித்தார்.
மேலும், முறையான ஆவணங்கள் இல்லாத 15 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளதோடு, சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இது போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








