Jul 5, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு உணவகங்களிலும், ஒரு முடித் திருத்தும் நிலையத்திலும் திடீர் சோதனை
தற்போதைய செய்திகள்

இரண்டு உணவகங்களிலும், ஒரு முடித் திருத்தும் நிலையத்திலும் திடீர் சோதனை

Share:

ஷா ஆலாம், ஜூலை.09-

ஷா ஆலாம் வட்டாரத்தில் இரண்டு முன்னணி உணவகங்களிலும், ஒரு முடித் திருத்தும் நிலையத்திலும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சட்டவிரோத அந்நியக் குடியேறிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், இதர உணவகங்களுக்கும் சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அனுப்புதல் முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் அந்த இரு உணவகங்களுக்கு எதிராக கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து இன்று மதியம் இந்தச் சோதனை முடுக்கி விடப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.

இரண்டு உணவகங்கள் மற்றும் ஒரு முடித் திருத்தும் நிலையத்தில் நடத்தப்பட்டச் சோதனையில் 23 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 24 அந்நிய நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் எந்தவோர் அடையாள ஆவணமும் இல்லை என்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது