காரும் லோரியும் மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு சிறார்கள் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று மாலை 4.06 மணியளவில் கெடா, கூலீம், பாடாங் மெஹா, ஜாலான் கூலிம்-பாலிங் சாலையில் நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பயணம் செய்த பெரோடுவா பெஸ்ஸா காரை, டிரெய்லர் லோரி ஒன்று மோதி தள்ளியதாக மலேசிய தீயணைப்பு,மீட்புப்படையின் கெடா மாநில பொது உறவு அதிகாரி அப்துல் ரஹ்மான் சோ ஒமார் தெரிவித்தார்.
இதில் 32 வயது ஆடவர், 30 மற்றும் 59 வயதுடைய இரண்டு பெண்கள், எட்டு மாத கைக்குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Related News

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி


