May 21, 2026
Thisaigal NewsYouTube
அப்பீல் நீதிமன்ற முடிவுக்கு எதிராக கிளேர் ரியுசாஸல் மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

அப்பீல் நீதிமன்ற முடிவுக்கு எதிராக கிளேர் ரியுசாஸல் மேல்முறையீடு

Share:

திரெங்கானு சுல்தானா, சுல்தானா நூர் ஸாஹிராவிற்கு அவதூறு ஏற்பட்டதற்கு முழு பொறுப்புதாரி தாங்களே என்று கூறி தங்களுக்கு எதிராக அப்பீல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சரவாக் ரிப்போர்ட் பத்திரிகையின் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரோவ்ன் மற்றும் மேலும் இரண்டு பிரதிவாதிகள், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி, நான்கு சட்ட அம்சங்களை மேற்கோள்காட்டி சரவாக் ரிப்போர்ட் பத்திரிகையின் ஆசிரியர் கிளேர் ரியுகாஸலும் இதர பிரதிவாதிகளும் மேல்முறையீடு செய்து இருப்பதாக அந்த பத்திரிகை ஆசிரியரின் வழக்கறிஞர் கைக்கால்டின் மஹிடின் தெரிவித்துள்ளார்.

Related News