Apr 4, 2026
Thisaigal NewsYouTube
மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

Share:

மாண்டின் அருகிலுள்ள தாமான் மாண்டின் பாரு பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அதனுள் சிக்கிக் கொண்ட பெண் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இரவு சுமார் 11.30 மணியளவில் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரருடன் வசித்து வந்த நிலையில், அவ்வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

நேற்று இரவு 11.33 மணியளவில் பெறப்பட்ட அவசர அழைப்பின் படி ,நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், அடுத்த 5 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.

அப்போது சுமார் 54 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு முழுவதுமாக எரிந்து சேதமடைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

மீட்பு பணிகளின் போது, அவ்வீட்டின் படுக்கையறையில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரைப் பரிசோதித்த சுகாதார அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது