Mar 15, 2026
Thisaigal NewsYouTube
சகத் தொழிலாளியை நரபலி கொடுத்த நபருக்கு 35 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

சகத் தொழிலாளியை நரபலி கொடுத்த நபருக்கு 35 ஆண்டு சிறை

Share:

புத்ராஜெயா,ஜன.11
லாட்டரி சீட்டில் முதல் பரிசு கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் சகத் தொழிலாளியை கழுத்து அறுத்து, நரபலி பூஜை கொடுத்த குற்றத்திற்காக முன்னாள் செம்பனைத் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

A. Francis என்ற 52 வயதுடைய முன்னாள் தோட்டத் தொழிலாளிக்கு தெமர்லோ உயர் நீதிமன்றம், விதித்த மரணத் தண்டனையை ரத்து செய்த கூட்டரசு நீதிமன்றம், 2023 ஆம் ஆண்டு மரணத் தண்டனையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்திற்கு ஏற்ப 35 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது.

சம்பந்தப்பட்ட நபர், பிடிபட்ட தினமாக 1994 ஆம் ஆண்டு ஆகட்ஸ்ட் 26 ஆம் தேதியிலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்நபர், கடந்த 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பகாங், தெமர்லோ மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாலான் கோலாலம்பூர்- குவாந்தான் - மெந்தாக்காப் சாலையில் கிம் ஸ்வி லியோங் தோட்டத்தில் ஒரு வங்காளதேசத் தொழிலாளியான அலி அஹ்மாட் முஹமாட் உல்லா என்பவரை நரப்பலி கொடுத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்