Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் 'லிட்டில் பாகிஸ்தானில்' அதிரடிச் சோதனை: சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் 'லிட்டில் பாகிஸ்தானில்' அதிரடிச் சோதனை: சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.27-

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, 'லிட்டில் பாகிஸ்தான்' என்றழைக்கப்படும், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள அலுவலகங்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பாகிஸ்தான், இந்தியா, வங்க தேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இச்சோதனையின் போது பலர் அங்கிருந்து தப்பியோட முயன்றதாகவும், சிலர் மயக்கமடைந்து கீழே விழுவது போல் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க, நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தாமாக முன்வந்து, சொந்த நாட்டிற்குத் திரும்பும் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வான் முகமட் வலியுறுத்தியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்