Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் 'லிட்டில் பாகிஸ்தானில்' அதிரடிச் சோதனை: சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் 'லிட்டில் பாகிஸ்தானில்' அதிரடிச் சோதனை: சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.27-

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, 'லிட்டில் பாகிஸ்தான்' என்றழைக்கப்படும், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள அலுவலகங்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பாகிஸ்தான், இந்தியா, வங்க தேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இச்சோதனையின் போது பலர் அங்கிருந்து தப்பியோட முயன்றதாகவும், சிலர் மயக்கமடைந்து கீழே விழுவது போல் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க, நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தாமாக முன்வந்து, சொந்த நாட்டிற்குத் திரும்பும் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வான் முகமட் வலியுறுத்தியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து