Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் 'லிட்டில் பாகிஸ்தானில்' அதிரடிச் சோதனை: சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் 'லிட்டில் பாகிஸ்தானில்' அதிரடிச் சோதனை: சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.27-

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, 'லிட்டில் பாகிஸ்தான்' என்றழைக்கப்படும், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள அலுவலகங்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பாகிஸ்தான், இந்தியா, வங்க தேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இச்சோதனையின் போது பலர் அங்கிருந்து தப்பியோட முயன்றதாகவும், சிலர் மயக்கமடைந்து கீழே விழுவது போல் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க, நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தாமாக முன்வந்து, சொந்த நாட்டிற்குத் திரும்பும் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வான் முகமட் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்