Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய 'வெல்ஃபயர்' ஓட்டுநர்!
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய 'வெல்ஃபயர்' ஓட்டுநர்!

Share:

சிப்பாங், அக்டோபர்.05-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக கார் சேவையை வழங்கிய 59 வயதுடைய ஆடவர் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆறு பயணிகளிடம் இருந்து கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்ல 225 ரிங்கிட் கட்டணம் வசூலிக்க அவர் முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு முதல் இந்தச் சட்டத்திற்குப் புறம்பானச் செயலில் ஈடுபட்டு வந்த அந்த ஓட்டுநரின் டொயோட்டா வெல்ஃபயர் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டத்திற்குப் புறம்பானச் சேவையில் ஈடுபடுவோருக்கு 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று ஜேபிஜே எச்சரித்துள்ளது.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு