Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிபிபி, சட்டத்துறை அலுவலகத்திற்குப் பணியிடம் மாற்றம்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிபிபி, சட்டத்துறை அலுவலகத்திற்குப் பணியிடம் மாற்றம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர், சட்டத்துறை அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். விசாரணை முடியும் வரையில் டிபிபி என்ற முறையில் அந்த அதிகாரி, வழக்கமான பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார் என்று சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் தெரிவித்தார்.

விசாரணை முழுமை பெற்றப் பின்னரே அந்த டிபிபி அதிகாரிக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.

எஸ்பிஆர்எம்மில் பணிக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த அதிகாரி போதைப்பொருளுடன் பிடிபட்டதாக கூறப்படும் தகவலை அந்த ஆணையம் உறுதிப்படுத்தியது.

அந்த அதிகாரியின் வீட்டைச் சோதனையிட்ட போலீசார், போதைப்பொருளைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்