Mar 20, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிபிபி, சட்டத்துறை அலுவலகத்திற்குப் பணியிடம் மாற்றம்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிபிபி, சட்டத்துறை அலுவலகத்திற்குப் பணியிடம் மாற்றம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர், சட்டத்துறை அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். விசாரணை முடியும் வரையில் டிபிபி என்ற முறையில் அந்த அதிகாரி, வழக்கமான பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார் என்று சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் தெரிவித்தார்.

விசாரணை முழுமை பெற்றப் பின்னரே அந்த டிபிபி அதிகாரிக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.

எஸ்பிஆர்எம்மில் பணிக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த அதிகாரி போதைப்பொருளுடன் பிடிபட்டதாக கூறப்படும் தகவலை அந்த ஆணையம் உறுதிப்படுத்தியது.

அந்த அதிகாரியின் வீட்டைச் சோதனையிட்ட போலீசார், போதைப்பொருளைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து