Mar 31, 2026
Thisaigal NewsYouTube
UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்
தற்போதைய செய்திகள்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

Share:

மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமான UKM வளாக நிலத்தில், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் ஓர் ஆலயம் குறித்து சிலாங்கூர் மாநில அரசு வழங்கவுள்ள வழிகாட்டுதல்களுக்காகப் பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருக்கிறது.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கனவே சிலாங்கூர் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த விவகாரமானது சிலாங்கூர் மாநிலத்தின் பௌத்த, கிறித்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச மதங்களுக்கான சிறப்புக்குழுவான 'லிமாஸ்' அமைப்பின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே, மாநில அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் கருத்துகள் வந்த பிறகே பல்கலைக்கழகம் இது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிக்கலை எவ்விதப் பதற்றமுமின்றி, மிகவும் கவனமாகவும் விரைவாகவும் பேசித் தீர்க்க விரும்புவதாக UKM நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், சமூகத்தில் தேவையற்ற குழப்பத்தையோ அல்லது பதற்றத்தையோ உருவாக்கும் வகையில் இந்த விவகாரம் குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை