Seberang Perai Tengah மற்றும் கூலிம் ஆகிய மாவட்டங்களில் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு மோட்டார் சைக்கிளில் வழிபறி கொள்ளையை நடத்தி வந்ததாக நம்பப்படும் ஒரு காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு கோலாலம்பூருக்கு சென்று விட்டு, விரைவு பேருந்தில் பினாங்கு செண்ரல் பேருந்து நிலையத்தை வந்தடைந்த 37 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அன்றைய தினம் மாலையில் ஜுருவில் உள்ள ஒரு உடம்புபிடி நிலையத்தில் அவரின் காதலியான 23 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக Seberang Perai Tengah மாவட்ட போலீஸ் தலைவர் ACP Tan Cheng San தெரிவித்தார்.








