Aug 9, 2026
Thisaigal NewsYouTube
போலி அடையாளக் கார்டுகள் தலா 5 ஆயிரம் ரிங்கிட் வரை விற்பனை
தற்போதைய செய்திகள்

போலி அடையாளக் கார்டுகள் தலா 5 ஆயிரம் ரிங்கிட் வரை விற்பனை

Share:

புத்ராஜெயா, மார்ச்.13-

உள்ளூர் பிரஜைகளுக்கு குலோன் செய்யப்பட்ட போலி மைகாட் அட்டைகள் தலா 4 ஆயிரம் ரிங்கிட் முதல் 5 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததை தேசிய பதிவு இலாகா கண்டு பிடித்துள்ளது.

உள்ளுர் வாசி ஒருவர், அந்த போலி மைகாட் அட்டையைப் பயன்படுத்தி, கடந்த மார்ச் 7 ஆம் தேதி விவேகக் கைப்பேசியை வாங்க முற்பட்ட போது பிடிபட்டார்.

அந்த நபர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்ட போது, போலியான மைகாட் அட்டையை தயாரிப்பதற்கு மூளையாக செயல்பட்டு வந்த நபர் அடையாளம் காணப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் தேசிய பதிவு இலாகாவின் அதிகாரிகள், சிலாங்கூர், அம்பாங், பாண்டான் இண்டாவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போது மைகாட் அட்டையைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சைபுஃடின் இவ்விவரத்தைத் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து