மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அசாம் பாகியின் பணி ஒப்பந்தக் காலத்தை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவுச் செய்யவில்லை என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார். இன்று அலோஸ்டாரில் மடானி மலேசியாவின் ஹரி ராயா பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
லத்திஃபா கொயா பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி, எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை பொறுப்பை ஏற்ற அசாம் பாக்கியின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது


