மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அசாம் பாகியின் பணி ஒப்பந்தக் காலத்தை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவுச் செய்யவில்லை என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார். இன்று அலோஸ்டாரில் மடானி மலேசியாவின் ஹரி ராயா பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
லத்திஃபா கொயா பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி, எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை பொறுப்பை ஏற்ற அசாம் பாக்கியின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


