மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அசாம் பாகியின் பணி ஒப்பந்தக் காலத்தை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவுச் செய்யவில்லை என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார். இன்று அலோஸ்டாரில் மடானி மலேசியாவின் ஹரி ராயா பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
லத்திஃபா கொயா பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி, எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை பொறுப்பை ஏற்ற அசாம் பாக்கியின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


