மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அசாம் பாகியின் பணி ஒப்பந்தக் காலத்தை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவுச் செய்யவில்லை என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார். இன்று அலோஸ்டாரில் மடானி மலேசியாவின் ஹரி ராயா பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
லத்திஃபா கொயா பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி, எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை பொறுப்பை ஏற்ற அசாம் பாக்கியின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


