Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பரஸ்பர பணியிட மாற்ற முறையை அறிமுகப்படுத்துவீர்
தற்போதைய செய்திகள்

பரஸ்பர பணியிட மாற்ற முறையை அறிமுகப்படுத்துவீர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தியிருப்பதைப் போன்று ஆசிரியர்கள் மத்தியில் இருவருக்கு இடையில் பரஸ்பர முறையில் பணியிடம் மாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் குளுவாங் எம்.பி. வோங் ஷூ கி கேட்டுக் கொண்டுள்ளார்.

இரு ஆசிரியர்கள் மத்தியில் ஒருமித்த கருத்துடன் பணியிடம் மாறிக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துவது மூலம் பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க முடியும் என்று வோங் ஷூ கி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனக்குப் பொருந்தி வராத ஓர் இடத்தில் ஆசிரியர் ஒருவர் வேலை செய்ய முடியாத நிலையில், அவர் பணியிலிருந்து விலகும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, அந்த ஆசிரியர் கோருகின்ற ஏற்புடைய இடத்திற்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாறிச் செல்வதற்கும், அவருடைய இடத்தை அங்கிருந்து வரக்கூடிய மற்றொரு ஆசிரியர் நிரப்புவதற்கும் இரு ஆசிரியர்களுக்கு இடையில் பரஸ்பர பணியிட மாற்றம் செய்து கொள்வதற்கான அணுகுமுறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அந்த எம்.பி. வலியுறுத்தினார்.

இதன் மூலம் கணவர் ஓர் இடத்திலும், மனைவி மற்றொரு இடத்திலும் வேலை செய்யும் நிலையில்லாமல் சுகாதார அமைச்சைப் போன்று கணவரும், மனைவியும் ஒரே பகுதியில் வேலை செய்யும் சூழல் ஏற்படும் என்று வோங் ஷூ கி தெரிவித்தார்.

அடுத்த புதிய கல்வியாண்டில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 451 கல்விப் பணியாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதனை நிறைவுச் செய்வதற்கு “ சுகா சமா சுகா “ முறையை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு