எல்மினாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அந்த தனியார் விமானம், ஆபத்து, அவசர சூழலில் இருப்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் ஷாஹ் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரம் பெறவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த விமானம், சுபாங் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து அனுமதிக் கிடைத்தப் பின்னர் இன்னும் 2 நிமிடத்தில் தரையிறங்குவதாக இருந்தது. அதற்குள் இவ்விபத்து நிகழ்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.
தவிர, அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு பிரச்னையை
எதிர்நோக்கியிருப்பதாக எந்தவொரு தகவலையும் கட்டுப்பாட்டுக் கோபுரம் பெறவில்லை என்று சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காணப்பட்ட ஹுசைன் ஒமார் விளக்கினார்.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.


