Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிரான விசாரணை
தற்போதைய செய்திகள்

அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிரான விசாரணை

Share:

கோலாலம்பூர், மார்ச் 1 -

இஸ்லாத்தின் உயர்வு கட்டாயம் தற்காக்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி பாஸ் ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை புலன் விசாரணை செய்து வருவதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பாஸ் கட்சித் தலைவர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இது தொடர்பாக விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி தெளிவுபடுத்தினார்.

அப்துல் ஹாடி அவாங், சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த கருத்தானது, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றக்கூட்டத்தில் அந்த மன்றத்தின் தலைவரான மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாரிபுடின் இட்ரிஸ் ஷா ஆற்றிய உரையை தொடர்பு படுத்தி பேசுவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் சிலாங்கூர் சுல்தான், தமது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஹாடி அவாங் வெளியிட்ட இந்த அறிக்கை, மலாய் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் நிந்தனை தன்மையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது..

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு