Feb 27, 2026
Thisaigal NewsYouTube
2020 முதல் 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் போதைப் பொருள் குற்றங்களுக்காகக் கைது
தற்போதைய செய்திகள்

2020 முதல் 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் போதைப் பொருள் குற்றங்களுக்காகக் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.27-

நாட்டில் கடந்த 2020 முதல் 2025 வரையிலான காலக் கட்டத்தில், போதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 1,800-க்கும் மேற்பட்ட போலீஸ் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று பத்து பஹாட் எம்.பி. ஓன் அபு பாக்கார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த உள்துறை அமைச்சு இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

1952-ஆம் ஆண்டு போதைப் பொருள் சட்டத்தின் கீழ் மொத்தம் 1,869 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 91 அதிகாரிகள் மற்றும் 1,778 இதர பணியாளர்கள் அடங்குவர்.

கைதானவர்களில் இதுவரை 958 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஞ்சிய வழக்குகள் 911 ஆகும். அவை தற்பொழுது புலனாய்வு விசாரணையிலோ, நீதிமன்ற விசாரணையிலோ அல்லது வேதியியல் மற்றும் நோயியல் அறிக்கைகளுக்காகவோ காத்திருப்பில் உள்ளன.

புக்கிட் அமானின் ஒருமைப்பாடு மற்றும் தர நிர்ணயத் துறை இந்த அதிகாரிகள் மீது விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு அவர்கள் மீது உள்நாட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

Related News

குடும்ப வன்முறை: பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபாமி ஸைனோல்  குற்றஞ்சாட்டப்பட்டார்

குடும்ப வன்முறை: பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபாமி ஸைனோல் குற்றஞ்சாட்டப்பட்டார்

யுடிஎம் மாணவர் மரணம்: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர் மூன்று ராணுவப் பயிற்சி அதிகாரிகள்

யுடிஎம் மாணவர் மரணம்: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர் மூன்று ராணுவப் பயிற்சி அதிகாரிகள்

லஞ்சம் வாங்கியதாக பரவிய வீடியோ: செராஸ் மாவட்ட  போலீஸ் மறுப்பு

லஞ்சம் வாங்கியதாக பரவிய வீடியோ: செராஸ் மாவட்ட போலீஸ் மறுப்பு

பட்டாசு வீசி தெரு நாயைக் கொன்ற உணவக உரிமையாளருக்கு 2 ஆயிரம் ரிங்கிட்  அபராதம்

பட்டாசு வீசி தெரு நாயைக் கொன்ற உணவக உரிமையாளருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மாமன்னருக்கு தசை மற்றும் எலும்பு வலி: அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

மாமன்னருக்கு தசை மற்றும் எலும்பு வலி: அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

பெண் கொடூரக் கொலை - முன்னாள் வருங்கால கணவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

பெண் கொடூரக் கொலை - முன்னாள் வருங்கால கணவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது