கூலிம், மார்ச்.08-
கூலிம் பகுதியில் உள்ள இரண்டாவது பட்டாலியன் பொதுப்படை முகாமின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 18 மில்லியன் ரிங்கிட் நிதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியில் 10 மில்லியன் ரிங்கிட் தண்ணீர் விநியோகத்தை சீரமைக்கவும், மீதமுள்ள 8 மில்லியன் ரிங்கிட் மின்சார வயரிங் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.
அத்துடன், கெடா மாநிலத்தில் உள்ள சுமார் 15 சமயப்பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக 2.69 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியையும் பிரதமர் அறிவித்தார். நாட்டில் ஊழலையும் முறைகேடுகளையும் தடுப்பதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுக்கு 15.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.








