திரெங்கானு, கெமாமான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் திரெங்கானு மந்திரி பெசார் அஹ்மத் சம்சூரி எதிர்காலத்தில் தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்பதற்கான சாத்தியத்தை அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மறுக்கவில்லை.
நாட்டின் பிரதமர் பொறுப்பை வகிப்பதற்கு தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஆற்றல் வாய்ந்த நிறைய தலைவர்கள் இருப்பதாக கெமாமான் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் இதனை தெரிவித்தார்.
வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதையும் பாகோ எம்.பி.யுமான முகைதீன் தமது உரையில் கோடிகாட்டினார்.








