பாஸ் கட்சி ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஹரி ராயா பொது உபசரிப்பு நடத்துவதற்கும் வருகின்ற 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு விளக்கம் அளித்துள்ளார்.
கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய 3 மாநிலங்களில் பிரதமர் தமது ஹரி ராயா பொது உபசரிப்பை நடத்துவதற்கு முக்கியக் காரணம், மக்களுடனான நெறுக்கத்தை அதிகப்படுத்தவே தவிர, தேர்தல் நோக்கத்தை கொண்டது அல்ல என்று விவசாயத் துறை அமைச்சருமான முகமட் சாபு தெளிவுப்படுத்தினார்.
எனவே 3 மாநிலங்களில் ஹரி ராயா பொது உபசரிப்பை நடத்துவதற்குப் பிரதமர் கொண்டுள்ள திட்டத்தை சர்ச்சையாக்க வேண்டாம் என்று முகமட் சாபு கேட்டுக்கொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


