ஈப்போ, ஜன - 8
சுங்ஙாய் நோர், கம்போங் புக்கிட், நுர் அஸ்-சலாம் கல்வி மையத்தில் பிறந்த பெண் குழந்தையை பெட்டியில் போட்டு தூக்கி வீசியதால் 17க்கும் 14க்கும் உட்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை காலை 7:28 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் தொப்புள் கொடியுடன் மீட்டெடுக்கப்பட்ட அக்குழந்தை செலாமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செலாமா மாவட்ட போலீஸ் தலைவர் சருடின் சமா தெரிவித்தார்.
விசாரணையில் குழந்தையை தூக்கி எரிந்த 17 வயதுடைய மாணவன் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியையும் போலீசார் கைது செய்ததாக சருடின் சமா கூறினார்.








