வரும் சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் டிஏபி தலைமையகம் எத்தகைய முடிவை எடுத்தாலும் இந்திய சமூகத்தின் நலன் காக்கப்படுவதற்கு தமது அரசியல் பயணம் தொடரும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி உறுதி கூறியுள்ளார். இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதற்கு முன்னெடுத்த தமது அரசியல் வாழ்வு, தங்கு தடையின்றி அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தாம் மீண்டும் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்யும் என்றார் அவர். மலேசிய தமிழர் குரல் இயக்கத்தன் 8 ஆம் ஆண்டுக்கூட்டத்தை நேற்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டாக்டர் இராமசாமி இதனை தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


