Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பெண் பாதுகாவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடவர் தேடப்படுகிறார்

Share:

செர்டாங், மார்ச்.04

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பண்டார் புத்ரி பூச்சோங்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் பாதுகாவலராக வேலை செய்து வந்த பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாதுகாவலர் குடியலில் கடமையில் இருந்த 32 வயது பெண் பாதுகாவலரை அந்த ஆடவர் சராமாரியாக தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்றின் வழி, அந்த சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி A.A. அன்பழகன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவரின் காதலை நிராகரித்தற்காக அந்தப் பெண்ணை அடித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து இருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதன் தொடர்பில் 42 வயதுடைய மேகவண்ணன் செல்வராஜு என்று அடையாளம் கூறப்பட்ட நபரை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு