கோலாலம்பூர் மாநகரில் கம்போங் டத்தோ ரஹ்மாட் ஹுஜுங்கில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தாஹ்ஃபிஸ் டாருல் குரான் இத்ஃபகியா சமயப்பள்ளி கட்டடத்திற்கு தீ வைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 23 பேரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட 22 வயது இளைஞருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை, மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரையில் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சம்பவம் நிகழும் அந்த இளைஞருக்கு 16 வயது என்றாலும் மிகப்பெரிய அளவில் உயிர் பலி சம்பவம் நிகழ்ந்த இந்த கொலைக்கு தார்மீக பொறுப்பேற்று அந்த நபருக்கான தண்டனை காலம், தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதாக மூவர் அடங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி அபு பாக்கார் ஜாயிஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி நிகழ்ந்த இந்த கோர தீச் சம்பவத்தில் அந்த சமயப் பள்ளியின் மூன்று கட்டடத் தொகுதிகள் அழிந்ததுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கியிருந்த கட்டடத் தொகுதியிலிருந்து அவர்கள் தப்பிக்க இயலாமல் மரணம் அடைந்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்,தனியொரு நபராக அந்த சமயப்பள்ளியின் கட்டடத்தின் படிகட்டுகளில் ஏறி, தீ வைத்து விட்டு வெளியேறும் காட்சி, அந்த இளைஞர், பெட்ரோல் நிலையத்தில் எண்ணெய் வாங்கிய காணொளி ஆகியவை அந்த இளைஞர்தான் இந்த பாதகத்தை செய்ததாக உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று நீதிபதி அபு பாக்கார் ஜாயிஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது


