Mar 24, 2026
Thisaigal NewsYouTube
மெட்ரிகுலேஷன் கல்லூரியில் மேற்படிப்பை தொடருவதற்கான வாய்ப்பைப் பெற்ற 2023 எஸ்.பி.எம் மாணவரான கிறிஸ்டினா த/பெ ஸ்ரீதரன்
தற்போதைய செய்திகள்

மெட்ரிகுலேஷன் கல்லூரியில் மேற்படிப்பை தொடருவதற்கான வாய்ப்பைப் பெற்ற 2023 எஸ்.பி.எம் மாணவரான கிறிஸ்டினா த/பெ ஸ்ரீதரன்

Share:

கூலாய்,ஜூலை 12-

கூலாய் – ஜொகூரில் உள்ள தங்காக் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் மேற்படிப்பை தொடருவதற்கான வாய்ப்பைப் பெற்ற 2023 எஸ்.பி.எம் மாணவரான கிறிஸ்டினா த/பெ ஸ்ரீதரன் கூலாய் நாடாளுமன்றத்தின் பார்வையைப் பெற்றுள்ளார்.

தனது தந்தையை இழந்துள்ள நிலையில், இவரின் தாயார் கூலாய் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருவதால், இவர்களிம் பொருளாதார நிலை அறிந்து அம்மாணவிக்கு இலவசமாக மடிக்கணினி ஒன்றை கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங் தனிப்பட்ட முறையில் வழங்கி உள்ளார். "இந்த முயற்சியானது கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்கள் நாட்டின் கல்வி முறையிலிருந்து பின்தங்கிவிடாமல் இருப்பதையும், அவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தெடர்வதையும் உறுதி செய்யும்." தனது நம்பிக்கை தியோ தெரிவித்தார்.

கூலாயில் சிறந்த மாணவர்களின் கல்வி அடைநிலையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கும், அவர்கள் மேற்கல்வியைத் தொடர உரிய வசதிகளைப் பெறுவதை உறுதிப்படுத்தவும் கூலாய் நாடாளுமன்ற அலுவலகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

Related News