Mar 14, 2026
Thisaigal NewsYouTube
அம்புலன்ஸ் உட்பட 7 வாகனங்கள் விபத்து:  மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்
தற்போதைய செய்திகள்

அம்புலன்ஸ் உட்பட 7 வாகனங்கள் விபத்து: மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.22-

கோலாலம்பூர், ஸ்தாப்பாக் பகுதியில் இன்று காலையில் அம்புலன்ஸ் உட்பட 7 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயமுற்றார்.

இந்த சம்பவம் Kampung Baru Air Panas, Jalan Usahawan 6 இல் காலை 8.10 மணியளவில் நிகழ்ந்தது. Jalan Kilang- கிலிருந்து வந்த செம்பிறைச் சங்கத்தை சேர்ந்த அம்புலன்ஸ் சைரன் ஒலியுடன் சமிக்ஞை விளக்கை கடக்க முயற்சி செய்த போது, அந்த வண்டியைக் கார் ஒன்று மோதியது.

நிலை தடுமாறிய அம்புலன்ஸ் வண்டி, இதர வாகனங்களை மோதித் தள்ளியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸாம்ஸுரி முகமட் ஈசா தெரிவித்தார்.

இந்த விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயமடைந்தார். விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து