Mar 27, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

Share:

மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வது குறித்து விவாதிக்க, அனைத்து மாநில அரசுகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் அடுத்த வாரம் சிறப்புச் சந்திப்பு நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் மூலம் இந்த விளக்கக்கூட்டம் நடத்தப்படும். பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்றார் பிரதமர்.

இன்று புக்கிட் ஜெலுத்தோங் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "அண்டை நாடுகளைப் போல சிக்கலான சூழல் நமக்கு ஏற்படாததற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம் என்றார்.

தற்போது வரை நாட்டில் எரிபொருள் பங்கீடு முறையோ அல்லது RON95 பெட்ரோல் விலையில் திடீர் உயர்வோ இல்லை. மே மாதம் வரை விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது, நிலைமை தினசரி கண்காணிக்கப்படுகிறது," என்றார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

மாண்ட் கியாரா கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் மீது குற்றச்சாட்டு

மாண்ட் கியாரா கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் மீது குற்றச்சாட்டு