Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கொடிய விலங்கினத்தைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கொடிய விலங்கினத்தைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.29-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்தியா, மும்பைக்கு கிப்பன் வகை குரங்கையும், இதர இரண்டு கொடி விலங்கினங்களையும் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, விமான நிலையத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு ஏஜென்சி நேற்று வெற்றிகரமாக முறியடித்தது.

20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அந்த மூன்று விலங்கினத்தையும் பயணப் பெட்டிக்குள் அடைத்து, மலேசியப் பிரஜை ஒருவர், மலேசிய ஏர்லைன்ஸ் MH 0194 விமானத்தில் கடத்துவதற்கு முயற்சி மேற்கொண்ட போது அதனை எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள், துல்லியமாகக் கண்டுபிடித்து, 46 வயதுடைய அந்த மலேசியப் பிரஜையைக் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட அந்த விலங்கினம், தேசிய வன விலங்கு பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், பிடிபட்ட நபர், 2008 ஆம் ஆண்டு அரிய விலங்கினம் மீதான அனைத்துலக வர்த்தகச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு