Mar 27, 2026
Thisaigal NewsYouTube
தங்க முதலீட்டு மோசடியில் முதியவர் 91,000 வெள்ளியை இழந்தார்
தற்போதைய செய்திகள்

தங்க முதலீட்டு மோசடியில் முதியவர் 91,000 வெள்ளியை இழந்தார்

Share:

திரெங்கானு, செப்டம்பர் 11-

போலி முதலீட்டு திட்டத்தில் கவரப்பட்ட
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்புப்பணமான 91 ஆயிரத்து 600 வெள்ளியை இழந்துள்ளார்.

85 வயதான அந்த முதியவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாட்ஸ்ஆப் எண்ணில் விளம்பரம் ஒன்றைப் பெற்றதாகக் கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் கூறினார்.

குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் எனக் கூறப்படும் மடீனா ஈமாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய அந்த முதியவர் ஊக்கவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த நபருக்கு விஐபி பிரமுகர்களுக்கான முதலீட்டுத் திட்டத்தில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 500 வெள்ளியை முதலீடு செய்தால் நான்கே மணி நேரத்தில் 15 ஆயிரத்து 800 வெள்ளியை லாபமாகப் பெற முடியும் எனக் கூறப்பட்டது.

இந்த திட்டத்தில் கிடைக்கக் கூடிய லாபத்தைக் கண்டு மதிமயங்கிப் போன அந்த முதியவர், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளில்
26 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை முதலீடு செய்து, மோசம் போனதாக ஏசிபி அஸ்லி குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை