நாட்டின் இரண்டாவது காலாண்டுப் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்ப்பை விட 5.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.‘மடானி’ பொருளாதாரக் கட்டமைப்பின் கீழ் நாட்டின் நெகிழ்வுத்தன்மையைக் காட்டுவதாகப் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேற்காசியப் போர் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகளுக்கு மத்தியிலும், மலேசியாவின் இந்த வளர்ச்சி சிங்கப்பூர் மற்றும் சீனாவின் வளர்ச்சியை முந்தியுள்ளது.
இருப்பினும், மக்கள் மற்றும் சிறு வணிகர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவின உயர்வைக் குறைக்க, வங்கிகள் மூலம் 15 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.
மேலும், தகுதி வாய்ந்தவர்களுக்கு ‘புடி மடானி’ மூலம் மானிய விலையிலான எரிபொருள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும், பொருளாதார அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.








