ரொம்பின், குவாலா ரொம்பின், சிம்பாங் செபாயாங் - கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஐந்து வயதுடைய சிறுவனின் உடல் நேற்று ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.
ரிஸ்க் ரமாடினா ஜமாலுடின் என்ற சிறுவனின் உடல் நேற்று மாலை 5:30 மணியளவில் தீயணைப்பு, மீட்பு படை குழுவினரால் கண்டெடுக்கப்பட்டதாக ரொம்பின் மாவட்ட காவல்துறை தலைவர் முஹமாட் அசாரி முக்தார் தெரிவித்தார்.
வீட்டின் அருகில் உள்ள ஜெட்டியில் அச்சிறுவனும் அவனின் மூன்று சகோதரர்களும் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்ததாக விசாரணையில் தெரிவந்துள்ளதாக முஹமாட் அசாரி கூறினார்.








