Aug 11, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வயது சிறுவன் குளத்தில் மூழ்கி மரணம்
தற்போதைய செய்திகள்

மூன்று வயது சிறுவன் குளத்தில் மூழ்கி மரணம்

Share:

பாலிக் பூலாவ், ஏப்ரல்.17-

கோலாலம்பூரிலிருந்து பினாங்கிற்கு தனது தந்தையுடன் சென்ற 3 மூன்று வயது சிறுவன் ஒருவன், தங்கும் விடுதியில் குளத்தில் மூழ்கி மரணமுற்றான்.

இந்தச் சம்பவம், நேற்று இரவு 10 மணியளவில் பினாங்கு, தெலுக் கும்பார், இனாப் டேசா விடுதியில் நிகழ்ந்தது.

பினாங்கில் தனக்கு நன்று அறிமுகமான நண்பரைச் சந்திப்பதற்காக அந்த 3 வயது சிறுவன் உட்பட மூன்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு 46 வயதுடைய நபர், சென்றிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

இப்பயணத்தின் போது அந்த சிறார்களின் தாயார் உடன் வரவில்லை. தங்கும் விடுதியில் விடப்பட்ட பிள்ளைகளைக் காணவில்லை என்பதை அறிந்து, அவர்களைத் தேடிக் கொண்டு அந்த நபரின் நண்பர் சென்ற போது அந்த 3 மூன்று வயது சிறுவன் நீரில் மூழ்கி விட்டது அறிய வந்ததாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி ஆடாம் தெரிவித்தார்.

தந்தையின் கவனக்குறைவு தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி