Mar 10, 2026
Thisaigal NewsYouTube
வேன் ஓட்டுநருக்கு 9,500 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

வேன் ஓட்டுநருக்கு 9,500 வெள்ளி அபராதம்

Share:

கெடா, லூனாஸில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சமய உணர்வுக்கு குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக வேன் ஓட்டுநர் ஒருவருக்கு கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 9 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதித்தது.

பட்டர்வொர்த், தெலூக் அயிர் தவார் ஐ சேர்ந்த எஸ்.வேலன் என்ற 43 வயதுடைய அந்த வேன் ஓட்டுநர் இக்குற்றத்தை கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 3.26 மணியளவில் லூனாஸ், தாமான் குச்சாய் யில் மஸ்ஜிட் ஜாமேக் பள்ளிவாசல் வளாகத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி மிர்சா முகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டன. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 298 ஆவது பிரிவின் கீழ் மூர்த்தி குற்றம் சுமத்தப்பட்டார்.

எனினும் தனக்கு எதிரான குற்றத்தை வேலன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து