கெடா, லூனாஸில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சமய உணர்வுக்கு குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக வேன் ஓட்டுநர் ஒருவருக்கு கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 9 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதித்தது.
பட்டர்வொர்த், தெலூக் அயிர் தவார் ஐ சேர்ந்த எஸ்.வேலன் என்ற 43 வயதுடைய அந்த வேன் ஓட்டுநர் இக்குற்றத்தை கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 3.26 மணியளவில் லூனாஸ், தாமான் குச்சாய் யில் மஸ்ஜிட் ஜாமேக் பள்ளிவாசல் வளாகத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி மிர்சா முகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டன. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 298 ஆவது பிரிவின் கீழ் மூர்த்தி குற்றம் சுமத்தப்பட்டார்.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை வேலன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


