கோலாலம்பூர்,ஆகஸ்ட் 18
இலக்கவியல், சுற்றுலா, சுகாதாரம், மருந்தகம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் ஆகிய துறைகளில் மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இடையே மொத்தம் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் MoU கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்வழி, மலேசியா தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மலேசியாவில் தங்கள் தொழில்துறைகளை விரிவுபடுத்த விரும்பும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடனும் அதன் பிரதிநிதிகளுடனும் பிரதமர் டத்தூஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பு நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.








