இணைய மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக சிறப்புப் பணிக் குழு நடத்திய தொடர் ஆலோசனைகளின் முடிவுகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைகளில் வர்த்தக வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் டிக் டாக் உள்ளிட்ட டிஜிட்டல் தள நிறுவனங்கள் முதல் முறையாக ஒருங்கிணைந்து பங்கேற்றதாக ஃபாஹ்மி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதுள்ள சட்டங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமலாக்க அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து இணைய மோசடிகளைத் தடுப்பதற்காக இந்தப் பணிக்குழுவும் சிறப்பு தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஃபாஹ்மி ஃபாட்சீல் விவரித்துள்ளார்.








