பிரபல வழக்கறிஞர் முஹம்மட் ஷஃபீ அப்துல்லா, வருமான வரி வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய 94 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி தொடர்பில், அந்த வாரியத்திற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தோல்விக் கண்டார்.
வழக்கறிஞர் ஷஃபீயின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் நீதித் துறை ஆணையர் ரோஸ் மாவார் ரொஸைமி தள்ளுபடி செய்தார்.
நிலுவையிலுள்ள அந்த வருமான வரியை வழக்கறிஞர் ஷஃபீ செலுத்த வேண்டும் என்று கோரி அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் தீய நோக்கம் இருப்பதாக கண்டறிய முடியவில்லை என்று ரோஸ் மாவார் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


