பிரபல வழக்கறிஞர் முஹம்மட் ஷஃபீ அப்துல்லா, வருமான வரி வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய 94 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி தொடர்பில், அந்த வாரியத்திற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தோல்விக் கண்டார்.
வழக்கறிஞர் ஷஃபீயின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் நீதித் துறை ஆணையர் ரோஸ் மாவார் ரொஸைமி தள்ளுபடி செய்தார்.
நிலுவையிலுள்ள அந்த வருமான வரியை வழக்கறிஞர் ஷஃபீ செலுத்த வேண்டும் என்று கோரி அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் தீய நோக்கம் இருப்பதாக கண்டறிய முடியவில்லை என்று ரோஸ் மாவார் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


