Jun 30, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறையின் அதிரடி நடவடிக்கை: 113 அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத்துறையின் அதிரடி நடவடிக்கை: 113 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மேடான் செலெரா உணவுக் கடைகளிலும், பேரங்காடிகளிலும், அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிகளிலும் மலேசிய குடிநுழைத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 113 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனை நடவடிக்கை கிள்ளானை இலக்காகக் கொண்டு கடந்த நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அளித்த தகவல் மற்றும் குடிநுழைவுத்துறையின் உளவுத் தகவல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

47 அமலாக்க அதிகாரிகளின் ஆள்பலத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

இதில் முறையான பயண ஆவணங்களைக் கொண்டு இருக்காத மியன்மார், இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் சீன நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு