Mar 14, 2026
Thisaigal NewsYouTube
நெல் அறுவடை செய்ய முடியவில்லை, விவசாயிகள் பெரும் இழப்பு
தற்போதைய செய்திகள்

நெல் அறுவடை செய்ய முடியவில்லை, விவசாயிகள் பெரும் இழப்பு

Share:

பகாங், பஹாங் துவா அருகில் இருக்கும் கம்போங் லங்கார் - ரில் வெள்ளத்தின் தாக்கத்தால் 40 விவசாயிகளின் நெல் அறுவடை செய்ய முடியவில்லை என்றும் 500,000 வெள்ளி இழப்பீடு கண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மாவார் லங்கார் நீர் பயன்படுத்தும் குழுவான (KPA) - வில் 80 ஹெக்தார் பரப்பளவை கொண்ட நெல் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறுவடை செய்ய தயாராக இருந்தது.

ஒரு வாரம் தொடர்ச்சியான மழையினால் 1 மீட்டர் வரை நீர் நெல் வயலில் பாதிக்கப்பட்டு அனைத்தும் பயனற்றுவிட்டதாக 58 வயதான ஷம்சுடின் அப்துல் ரானி கூறினார்.

ஒவ்வொரு பருவத்திற்கும் 1,500 வெள்ளி முதல் 1,800 வெள்ளி வரை நெல் விளைச்சல் ஆக செலவிடப்படுகிறது. இத்தகைய திடீர் வெள்ளம் தங்களின் தொழிலை பெரிதளவில் பாதிப்பதாக 34 வயதுடைய முஹமாட் ஃபடில் முஹமாட் சாலெஹுடின் விவரித்தார்.

Related News