ஜோர்ஜ் டவுன்,ஜன.11
சுங்ஙாய் டுவா நீர் சுத்திகரிப்பு மையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் 22 தடுப்பு பராமரிப்பு திட்டங்கள் ஆகியவை நேற்று இரவு 10 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தன.
இந்த சீர் திருத்தும் பணிகள் திட்டமிடப்பட்டிருந்த நேரத்திற்கு முன்பாகவே செய்து முடிக்கப்பட்டதாக பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் (PBAPP) தலைமை நிர்வாக அதிகாரி கே.பத்மநாதன் தெரிவித்தார்.
பழுதுபார்க்கும் பணிகளை சரிசெய்வதில் PBAPP கடுமையாக உழைத்து வருவதாகவும் விரைவில் இது முடிவடையும் என்றும் பத்மநாதன் வலியுறுத்தினார்.








