Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தவறு நிகழ்ந்ததற்கான ஆதாரம் இருந்தால் விசாரணைக்கு உதவ முன் வாருங்கள்
தற்போதைய செய்திகள்

தவறு நிகழ்ந்ததற்கான ஆதாரம் இருந்தால் விசாரணைக்கு உதவ முன் வாருங்கள்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.02-

புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் தவறு ஏதும் நிகழ்ந்ததற்கான ஆதாரம் உள்ள பொதுமக்கள் போலீசாரின் விசாரணைக்கு உதவ முன் வருமாறு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். பேரளவில் சேதத்தையும் குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள அவ்வெடிப்புக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய முழுமையான துல்லிதமான விசாரணை தேவை. ஆதாரம் இருக்கும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவும் பட்சத்தில் அது அதிகாரத்துவ தரப்புகளுக்கு பேருதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

ஊராட்சி மன்றம் உட்பட மாநில அரசு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறது. அதே சமயம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பு, நலன், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றுக்கு மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்கள் முன்னுரிமை அளிக்கும் என அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

வெடிப்புச் சம்பவம் தொடர்பான முதல் கட்ட விசாரணை அறிக்கை 72 மணி நேரங்களில் சமர்ப்பிக்கப்படும் என அவர் நேற்று கூறியிருந்தார். மண் தோண்டும் பணிகளே வெடிப்புக்கான காரணம் எனக் கூறப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

தவறு நிகழ்ந்ததற்கான ஆதாரம் இருந்தால் விசாரணைக்கு உதவ முன்... | Thisaigal News