பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மேலும் ஒரு தவணைக்காலம் நாட்டை நிர்வகிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி கேட்டுக்கொண்டார். அன்வார் தமது பணியை திறம்பட செய்து முடிப்பதற்கு நியாயமான மற்றும் ஏற்புடைய ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் மிக குறுகிய காலத்திலேயே ஆட்சி மாற்றத்தை கோருவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
துன் மகாதீர் முகமது பிரதமராக ஒரு நீண்ட கால அடிப்படையில், குறிப்பாக 22 ஆண்டு காலம் ஆட்சி செலுத்தியப்பின்னர் மீண்டும் ஒரு முறை நாட்டிற்கு பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினர். துன் மகாதீருக்கு இத்தகைய விட்டுக்கொடுக்கும் போக்கை மக்கள் கடைப்பிடிக்க முடியுமானால், இதேபோன்ற வாய்ப்பு அன்வாருக்கும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, மேலும் ஒரு தவணைக்காலத்திற்கு அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர் இராமசாமி வலியுறுத்தினார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


