பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மேலும் ஒரு தவணைக்காலம் நாட்டை நிர்வகிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி கேட்டுக்கொண்டார். அன்வார் தமது பணியை திறம்பட செய்து முடிப்பதற்கு நியாயமான மற்றும் ஏற்புடைய ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் மிக குறுகிய காலத்திலேயே ஆட்சி மாற்றத்தை கோருவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
துன் மகாதீர் முகமது பிரதமராக ஒரு நீண்ட கால அடிப்படையில், குறிப்பாக 22 ஆண்டு காலம் ஆட்சி செலுத்தியப்பின்னர் மீண்டும் ஒரு முறை நாட்டிற்கு பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினர். துன் மகாதீருக்கு இத்தகைய விட்டுக்கொடுக்கும் போக்கை மக்கள் கடைப்பிடிக்க முடியுமானால், இதேபோன்ற வாய்ப்பு அன்வாருக்கும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, மேலும் ஒரு தவணைக்காலத்திற்கு அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர் இராமசாமி வலியுறுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


