Mar 24, 2026
Thisaigal NewsYouTube
ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

Share:

மானிய விலை ரோன்95 பெட்ரோலை அதிக அளவில் நிரப்பியதாகக் நம்பப்படும் கார் உரிமையாளர் ஒருவரின் மைக்காட் அடையாள அட்டை இரத்து செய்யப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய காணொளி ஒன்றில், தம்பதி ஒருவர் சுமார் 230 ரிங்கிட் மதிப்பிலான ரோன்95 எரிபொருளை நிரப்புவது போலான காட்சிகள் பதிவாகியுள்ளன.

இச்சம்பவம் ஜொகூர் மாநிலத்தின் ஸ்குடாய் பகுதியில் உள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

அந்த தம்பதியினர் ஜெர்ரி கேன்களில் பெட்ரோல் நிரப்பியதோடு, காரிலும் பெட்ரோல் நிரப்பியது அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

மானிய விலை ரோன்95 பெட்ரோலை அதிக அளவில் நிரப்பியதாகக் நம்பப்படும் கார் உரிமையாளர் ஒருவரின் மைக்காட் அடையாள அட்டைக்கான சலுகை இரத்து செய்யப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களைத் தடுப்பதற்காக அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News