Apr 4, 2026
Thisaigal NewsYouTube
மிகப்பெரிய பலனை ஏற்படுத்திய மாநாடாகும்
தற்போதைய செய்திகள்

மிகப்பெரிய பலனை ஏற்படுத்திய மாநாடாகும்

Share:

பினாங்கு, ஜன.5-

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பான GOTO ( கோத்தோ ) ஏற்பாட்டில் பினாங்கு மாநில அரசாங்கத்தின் இணை ஆதரவில் நடைபெற்ற 11 வது முறையாக உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு, ஒரு சிறந்த முயற்சியாகும். இது போன்ற மாநாடு மலேசியாவில் பிற மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று கோத்தோ மாநாட்டின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் குமணன் பழனிவேலு தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறிப்பாக பெண் தொழில் முனைவர்களுக்காக நடத்தப்பட்ட ஆய்வரங்கம் மிகப்பெரிய பலனை பெண்களுக்கு ஏற்படுத்தும் என்று கோத்தோ மாநாட்டின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் எம். கணேஷ்வரி நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு தமிழர்களுக்கு மதிப்பையும், அங்கீகாரத்தையும் ஏற்படுத்திய மாநாடாகும் என்று மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலான பேராளர்கள் கருத்துரைத்தனர்.

Related News